உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

திட்டக்குடி தாலுகாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு

திட்டக்குடி : 

          வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திட்டக்குடி தாலுகா தேர்தல் துணை தாசில்தார் அண்ணா துரை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

              கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனி சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், நீக்கம் சம்பந்தமாக கடந்த 1 முதல் 16ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் போதிய கால அவகாசம் கேட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று வரும் 26ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். கால அவகாச நீட்டிப்பை பயன்படுத்தி நகர்ப் புற, கிராம வாக்காளர்கள் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்களில் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்கி பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior