உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

கடலூரில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கருவூலத்துறையினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

           கருவூலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

              மாவட்ட தலைவர் சிவநேசன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், கல்யாணசுந்தரம், தமிழ்நாடு மருத்துவத்துறை அனைத்து ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அய்யாசாமி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வையாபுரி உட்பட பலர் பங்கேற்றனர். கருவூலத்துறையில் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மிகை நேர படியை உயர்த்த வேண்டும். 2009ம் ஆண்டு கண்காணிப்பாளர் தேர்வுநிலை பட்டியலை வெளியிட வேண்டும். புதிய வருவாய் வட்டங்களில் புதிய சார் கருவூலங்களை துவக்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior