உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

நெல்லிக்குப்பம் அண்ணா நகரில் குளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

நெல்லிக்குப்பம் : 

            நெல்லிக்குப்பம் அண்ணா நகரில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

            நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாய்க்கால் மூலம் சென்று அண்ணா நகரில் உள்ள குளத்தில் தேங்கி அங்கிருந்து வெள்ளப் பாக்கத்தான் வாய்க்கால் வழியே செல்ல வேண்டும். ஆனால் அந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் வாய்க்கால் மட்டுமின்றி குளமும் புதர்மண்டிக் கிடக்கிறது. 

                  குளத்தில் இருந்து கழிவுநீர் செல்ல முடியாமல் ஆகாயத்தாமரை செடி மண்டி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. குளத்தின் அருகே நூற்றுக்கணக்கான வீடுகள் மட்டுமின்றி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. பகல் நேரங்களிலேயே அப்பகுதி மக்கள் மட்டுமின்றி மாணவிகளையும் கொசுக்கள் கடிப்பதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக வாய்க்காலை தூர்வாரி கழிவுநீர் செல்ல வழி செய்ய வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior