உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

கோவை பொதுக்கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.,வில் எழுச்சி : நயினார் நாகேந்திரன் பேச்சு

கடலூர் : 

           கோவையில் செம்மொழி மாநாடு என்ற பெயரில் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசினார். ஜெ., பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது.

கூட்டத்தில் மாநில செயலாளர் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: 

            கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் அரசு பணம் 350 கோடி ரூபாய் வீணடிக்கப்பட் டுள்ளது. இதற்காக போடப்பட்ட சாலைகள், கட்டப்பட்ட கட்டடங்கள் தரமற்றவையாக உள்ளது. கோவையில் அ.தி. மு.க., சார்பில் நடத்தப் பட்ட கூட்டத்தால் புதிய எழுச்சி ஏற்பட்டு தொண் டர்கள் மத்தியில் புதிய வேகம் பிறந்துள்ளது. உளவுத்துறை, கருணாநிதியிடம் 1.50 லட்சம் பேர் கூடியதாக கூறியுள்ளனர். ஆனால் 6 லட்சம் பேர் கூடியதை மூடி மறைக்க முடியாது. 10 கி.மீ., தூரத்திற்கு தொண்டர்கள் நின்று ஜெயலலிதாவை வரவேற்றனர்.

             கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.,வில் இந்த அளவிற்கு கூட்டம் கூடவில்லை என அனைத்து தரப்பினரும் பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு அ.தி.மு.க.,வினர் எழுச்சியோடு காணப்படுகின்றனர். கோவையில் தொடங் கிய இந்த எழுச்சி கடலூர் வரை தொடர்கிறது. இந்த எழுச்சியை நாம் பயன்படுத்திக் கொண்டு தேர்தல் வரை கொண்டு செல்ல வேண்டும். முறையாக தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்கள் இருந்தாலும். எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்ற சூழல் உள்ளது. ஜெயலலிதா தேர்தலுக்கு தயாராக உள்ளார். மீண்டும் எம்.ஜி.ஆர்., ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் அதற்கு அ.தி.மு.க., வினர் ஜெயலலிதா யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவரை ஒற்றுமையாக இருந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior