உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

பண்ருட்டி பகுதியில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

பண்ருட்டி : 

              பண்ருட்டி பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

              பண்ருட்டி போலீஸ் லைன் குடியிருப்புகள், காமராஜர் நகர் பகுதி, இந்திராகாந்தி சாலை, லிங்க்ரோடு பகுதியில் எப்போதும் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிந்து வருகிறது. குரங்குகள் இப்பகுதியில் உள்ள கேபிள் ஒயர்கள், டெலிபோன் ஒயர்கள் அறுத்து விடுகின்றன. சில நேரங்களில் அந்த வழியே செல்பவர்களை கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் வீட்டின் ஜன்னல் வழியாக நுழைந்து வீட்டினுள் உள்ள பொருட்களை சாப்பிட்டு விட்டு செல்வதுடன் சிறு சிறு பாத்திரங்களையும் களவாடிச் செல்கின்றன.

                குரங்குளின் தொடர் அட்டகாசத்தால் இப்பகுதிமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குரங்குகளை பிடித்து வனத்துறை எல்லையில் விட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் கண்டு கொள்ளவில்லை. இதற்கு நகராட்சி அதிகாரிகள் வனத்துறையினர் ஒத்துழைப்புடன் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior