உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

புவனகிரி அரசு விதைப் பண்ணையில் மோட்டார் பழுது : மண்புழு உரம் தயாரிப்பு பணிகள் பாதிப்பு

புவனகிரி : 

            அரசு விதைப் பண்ணையில் மின் மோட்டார் பழுதாகியதால் மண்புழு உரம் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

           புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் அரசு விதை பண்ணை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் விதைகள் வேளாண்மை அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதேபோல் இங்கு சிமென்ட் தொட்டிகள் அமைத்து மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரங்களை கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் வாங் கிச் சென்றனர். காலப் போக்கில் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே விவசாயிகள் தங்கள் பகுதிகளில் சொந்தமாக மண் புழு உரம் தயாரித்து வருவதால் உரம் வாங்கும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்தது. அரசு பண் ணையில் மண்புழு உரம் விற்பது குறைந்தது.

                  இந்நிலையில் மின் மோட்டார் பழுதாகி விட் டதால் தண்ணீர் வசதி இன்றி உரம் தயாரிக்கும் பணி கடந்த ஒரு மாதத் திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உரம் வாங்க வரும் விவசாயிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். உடனடியாக மின்மோட்டார் பழுது நீக்கி உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior