உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

5 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி- சி15


ஸ்ரீஹரிகோட்டா:
 
             இந்தியாவின் பிஎஸ்எல்வி- சி15 ராக்கெட் 5 செயற்கைக்கோள்களுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.51 மணி நேர கவுண்ட் டவுன் முடிந்ததும் 44.4 மீட்டர் உயரமுடைய, 260 கோடி மதிப்பிலான பிஎஸ்எல்வி சி-15 சதீஷ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.  
 
                திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் ஆகியோர் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட்டனர். பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் 17-வது ராக்கெட்டாக, இந்த பிஎஸ்எல்வி - சி15 ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. 694 கிலோ எடையுள்ள கார்டோசாட்-2பி என்ற அதிநவீன தொலையுணர்வு செயற்கைக்கோள் மற்றும் 4 சிறிய செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு துருவ வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. 
 
               கார்டோசாட்-2 பி செயற்கைக்கோள் செயற்கைக்கோள் எடுக்கும் படங்களை கொண்டு கிராமங்களில் உள்ள வளங்களை மதிப்பிடவும்,  விரிவான நகர்ப்புற உள்கட்டமைப்பு பணிகளை திட்டமிடவும், போக்குவரத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.வனப் பகுதிகளின் வரைபடம் தயாரிக்கவும், மரங்களை கணக்கிடவும், ஊரகப் பகுதிகளில் சாலைகளை அமைக்கவும், கால்வாய் பணிகளுக்கும், கடலோரத்தில் உள்ள நிலங்களை பயன்படுத்தவும், சதுப்பு நிலக் காடுகளின் வரைபடம் தயாரிக்கவும், சுரங்கப் பணிகளை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் பயன்படும். கார்டோசாட்-2 பி செயற்கைக்கோள் தவிர அல்ஜீரிய நாட்டின் அல்சாட்-2ஏ, கனடாவின் டொரன்டா பல்கலைக்கழகத்தின் நானோ ரக செயற்கைக்கோள், 1 கிலோ எடை கொண்ட ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகத்தின் டிசாட்-1 என்ற செயற்கைக்கோள், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த ஸ்டுட்சாட் என்ற ஒரு கிலோவுக்கு குறைவான எடையுள்ள செயற்கைகோள் ஆகியவையும் விண்ணில் ஏவப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior