உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் ஆயுர்வேத மருத்துவ படிப்பு

             பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் சேர்வதற்காக 7.5 ஆண்டுகால ஆயுர்வேத மருத்துவப் படிப்பை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயுர்வேதத் துறையின் ஆலோசகர் எஸ்.கே.சர்மா கூறினார். கோவை- ராமநாதபுரம் ஆயுர்வேதிக் பார்மஸி நிறுவனத்தில் புதிய கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இவ் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சர்மா பேசியது:

                நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத மருத்துவம் சிறந்த வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த வளர்ச்சிக்கு துணை நிற்கும் ஆயுர்வேதம் குறித்த ஆராய்ச்சிகளும் மேம்பட வேண்டும். இந்தியாவில் சில நிறுவனங்கள்தான் ஆயுர்வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்குத் தேவையான உதவியைச் செய்ய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை தயாராக உள்ளது. மற்ற மருத்துவ முறைகளுடன் ஒப்பிடுகையில், ஆயுர்வேத ஆராய்ச்சி இன்னும் வளர்ச்சி பெற வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின் மகிமையை அறிந்துகொண்ட வெளிநாட்டு மருத்துவர்கள், இந்த மருத்துவ முறை குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆயுர்வேத ஆய்வில் ஈடுபடும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

             முன்னைக் காட்டிலும் ஏராளமான மாணவர்கள் ஆயுர்வேத மருத்துவப் படிப்பைக் கற்க முன்வருகின்றனர். தற்போது பிளஸ் 2 முடித்த பிறகு, 5.5 ஆண்டு கால ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் சேர்ந்து மாணவர்கள் பயில்கின்றனர். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களை நேரடியாக ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அவர்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு தாவரவியல், வேதியியல், மூலிகைத் தாவரங்கள், சமஸ்கிருதம் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படும். அதன் பிறகு, அவர்கள் 5.5 ஆண்டு கால ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். ஆயுர்வேத மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குறித்த விவரங்களையும், நோய் மற்றும் குணமடையும் வேகம் தொடர்பான தகவல்களையும் மருத்துவர்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும். இத்தகைய தகவல்கள் ஆயுர்வேத ஆராய்ச்சியை மேம்படுத்த உதவும், என்றார் சர்மா.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior