உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

வி.ஏ.ஓ., பணியிடம் காலி சிறுபாக்கத்தில் மக்கள் அவதி

சிறுபாக்கம் :

              சிறுபாக்கம் குறுவட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால் மக்கள் கடுமையாக அவதியடைகின்றனர்.

            திட்டக்குடி தாலுகாவில் சிறுபாக்கம் குறுவட்ட தலைமையிடமாக இயங்கி வருகிறது. இப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பணிபுரிந்த வி.ஏ.ஓ., ராமலிங்கம், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்றார். அதன் பின் வி.ஏ.ஓ., பணியிடம் காலியாகவே உள்ளது. பெரிய ஊராட்சியான சிறுபாக்கத்தில் வி.ஏ.ஓ., நியமிக்கப்படாமல் உள்ளதால் ஒரங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கூடுதல் பணியாக செய்து வருகிறார். இதனால் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், முதியோர் மற்றும் பயனாளிகளுக்கு உதவித்தொகை, நில அளவு சம்பந்தமான அனைத்து வருவாய் பணிகளும் பாதிப்படைகின்றன. கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள், நலத்திட்ட பயனாளிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சிறுபாக்கத்திற்கு உடனடியாக வி.ஏ.ஓ.,வை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior