உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

விருத்தாசலம் பாலக்கரையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விருத்தாசலத்தில் மக்கள் கடும் அவதி

விருத்தாசலம் : 
 
               விருத்தாசலம் பாலக்கரையில் சாலையை அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

               விருத்தாசலத்தில் பாலக்கரை நகரின் முக்கிய பகுதியாகும். இப்பகுதியில் சாலை குறுகிய அளவாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க சாலை அகலப்படுத்தும் பணிக்காக நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடலூர் செல்லும் சாலையிலும், ஜங்ஷன் ரோடு செல்லும் சாலையின் இரு புறங்களிலும் ஜல்லிகள் கொண்டு நிரப்பி அதன் மேல் சிமென்ட் கலந்த ஜல்லி போட்டு சமன் செய்தனர். அதன் பிறகு அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் சென்றால் ஜல்லியில் சிக்கி வாகனம் சருக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். சாலை விரிவு படுத்தும் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior