உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

வேளாண் பொறியியல் துறையின் "போக்கு' இயந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் கவலை

கடலூர் : 

                வேளாண்மை பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் இயந்திரங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

             வேளாண்மை பொறியியல் துறை கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இவ்வலுவலகத்தின் மூலம் அரசே விவசாயிகளுக்கு தேவையான அறுவடை இயந்திரம், டிராக்டர், புல்டோசர் உள்ளிட்ட இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு விடுகிறது. விவசாயிகளுக்கு இச்சலுகை சரியாக கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. 

                     பணம் செலுத்தியதன் வரிசைப்படிதான் இயந்திரங் களை அனுப்ப வேண்டும். ஆனால் அதிகாரிகள் ஏனோ தானோ என செயல்பட்டு வருகின்றனர். ஏதாவது ஒரு இடத்தில் இயங்கினால் போதும் என அலட்சியமாக இருந்து வருகின்றனர். அதனால் விவசாயிகளினால் அலுவலகத்தில் பணம் செலுத்த முடியவில்லை. அரசு லாப நோக் கத்தோடு இந்த திட்டத்தை செயல்படுத்த வில்லை. விவசாயிகளுக்கு சேவை அடிப்படையில்தான் செய்து வருகிறது. ஆனால் அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் விவசாயிகளை அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் செலுத்தும் கட்டணத்தொகை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யவும், ஒளிவு மறைவின்றி இயந்திரங்கள் இயங்கும் இடங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறைக் காலங்களிலும் கட்டணம் செலுத்த அரசு ஆவண செய்ய வேண்டும். அப்போதுதான் அரசின் சலுகைகள் விவசாயிகளுக்கு ஒழுங்காக போய் சேரும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior