உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

கடலூரில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுது பார்க்கும் கடையில் தீ: ரூ. 5 லட்சம் சேதம்

டலூர்:

          கடலூரில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன.

                கடலூர் அருகே காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் டி.நமச்சிவாயம். கடலூர் திருப்பாப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில், தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை நமச்சிவாயம், பழுதுபார்க்கும் வேலைகளை முடித்துக் கொண்டு, கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இரவு 1-30 மணி அளவில் பூட்டிய கடைக்குள் இருந்து புகை வெளிவந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நமச்சிவாயத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் கடைக்குள் இருந்த 30 தொலைக்காட்சிப் பெட்டிகள் 50 தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான பேனல் போர்டுகள், 60 வி.சி.ஆர். பிளேயர்கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தன. ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்து விட்டதாக நமச்சிவாயம் தெரிவித்தார். மின்சாரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்காலம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior