உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

கடலூர் மாவட்டத்தில் மின் மோட்டாருக்கு ஏற்ற டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை

விருத்தாசலம் : 

           விவசாயிகள் பயன்படுத்தும் மோட்டார்களின் குதிரைத் திறனை கணக்கிட்டு அதற்கேற்ற டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து நிலத்தடி நீர் பாசன விவசாயிகள் பேரவை மாவட்டத் தலைவர் சேதுராமன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

             கடலூர் மாவட்டத்தில் பருவநிலை மாற்றத்தாலும், மழை குறைவாலும், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தாலும் நிலத் தடி நீர் வற்றி வருகிறது. மேலும் ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பால் மழை நீர் சேமிப்பு குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் அதிக ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைத்து, அதிக குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார் களை பயன்படுத்தும் கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் டிரான்ஸ்பார்மர்களின் சக்தி போதுமானதாக இல்லாததால் அடிக்கடி மோட்டார்களில் காயில் வீணாகி வருகிறது. எனவே, விவசாயிகள் பயன்படுத்தும் மோட்டார்களின் குதிரைத் திறனை கணக்கிட்டு அதற்கேற்ற டிரான்ஸ்பாமர்கள் அமைக்க வேண்டும். பழுதடையும் டிரான்ஸ்பார்மர்களை மூன்று தினங்களுக்குள் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior