உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி ஆய்வு

சிதம்பரம் : 

               சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

                சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பொதுப்பணித் துறையின் கீழ் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த மே மாதம் முதல் 56 பணிகள் 215 கி.மீ., நீளத்திற்கு 2 கோடியே 50 லட்சம் செலவில் நடந்து வருகிறது. சம்பா சாகுபடி மற்றும் மழைக்காலம் துவங்க இருப்பதால் பணிகள் துரிதபடுத்தப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பணிகளின் நிலை குறித்து பொதுப்பணித் துறை சிதம்பரம் செயற் பொறியாளர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழுவினர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பார் வையிட்டு ஆய்வு செய்தனர். உதவி செயற் பொறியாளர்கள் பெரியசாமி, கலியபெருமாள், உதவி பொறியாளர்கள் சரவணன். விவசாய சங்கத் தலைவர்கள் ரவீந்திரன், கண்ணன், இளங்கீரன் உள்ளிட்ட விவசாயிகள் உடன் சென்றனர். சிதம்பரம் அருகே மாரியப்பா நகர், சந்திரமலை, சித்தலபாடி, பிச்சாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பாசனம் பெறும் உப்பனார் பாசனம் மற்றும் வெள்ளக்கால்வாய் 7 கி.மீ., நீளத்திற்கு 19 லட்சம் ரூபாயில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஐந்து கிராம மக்கள் பயன் பெரும் வகையில் தூர்வாரப்பட்டுள்ள 

               இப்பணி மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், துணை முதல்வர் ஸ்டாலினிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் செய்யப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் "15 பணிகள் 49 கி.மீ., சிதம்பரம் வட்டத்தில் 31 பணிகள் 166 கி.மீ., நீளத்திற்கும் தூர்வாரி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் முடிவடைந்தால் நீர் பங்கீடு முறை சிறப்பாக நடைபெறும் எனவும், வெள்ள காலங்களில் மழைநீர் விரைந்து வடிவதால் 15 கிராமங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து தவிர்க்கப்படும்' என செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior