உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

நெய்வேலி புத்தகக் கண்காட்சி கட்டுரைப் போட்டி: திருவையாறு மாணவி முதலிடம்


கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றஎன்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சு.அகல்யா.
 
நெய்வேலி:
 
           தினமணி- நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டியில் கல்லூரிப் பிரிவில் தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த மாணவி ஆர்.சபிதா முதலிடத்தையும், பள்ளிப் பிரிவில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சு.அகல்யா என்ற மாணவியும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
 
              கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கவுள்ளார்.
 
பரிசு பெற்றோர் விவரம்:
 
கல்லூரிப் பிரிவு: 
 
               முதல் பரிசு (ரூ.2000) ஆர்.சபிதா, கிங்ஸ் பொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர், 2-ம் பரிசு (ரூ.1500) க.பிரபாகரன், செந்தூரான் தொழில்நுட்பக் கல்லூரி, புலிவலம், 3-ம் பரிசு (ரூ.1000) ஆர்.லட்சுமிபிரியா, அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி.ஆறுதல் பரிசு பெறுவோர் (தலா ரூ.500): மு.முகமது ஆதில், அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம், மதுரை மாவட்டம். ஆர்.தனலட்சுமி, இதயா மகளிர் பொறியியல் கல்லூரி, சின்ன சேலம். பி.தாமஸ் வெனீஸ், சேக்ரட் ஹார்ட் கல்லூரி, பூந்தமல்லி, சென்னை. டி.பிரகாஷ், தனலட்சுமி கல்லூரி, காட்டூர், திருச்சி. எ.ராஜ்குமார், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழகம், மதுரவாயல், சென்னை.
 
பள்ளிப் பிரிவு: 
 
              முதல் பரிசு (ரூ.2000) சு.அகல்யா, என்எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நெய்வேலி. 2-ம் பரிசு (ரூ.1500) செ.ராதிகா, மத்திய மேல்நிலைப்பள்ளி, ஏ.நாகூர், பொள்ளாச்சி தாலுகா, கோவை மாவட்டம். 3-ம் பரிசு (ரூ.1000) எஸ்.ஃபயாஸ், ஜான்டூவி மெட்ரிக் பள்ளி விழுப்புரம்.ஆறுதல் பரிசு பெறுவோர் (தலா ரூ.500): வி.விக்னேஸ்வரன், அரசு மேல்நிலைப்பள்ளி திருவாடனை, ராமநாதபுரம் மாவட்டம். ச.மலர்விழி, சேரன் மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் மாவட்டம். ஜான் பெர்ணாண்டோ, ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை. ம.அபிநயா, ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நெய்வேலி. ம.பேச்சியம்மாள், குமரகுருபர சுவாமிகள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வைகுண்டம்.ஆறுதல் பரிசு (ரூ.500) பெறும் நெய்வேலி ஜவகர் கல்லூரி மாணவர்கள்: கோ.சஹானா, பிஎஸ்சி 2-ம் ஆண்டு, கா.கனகலட்சுமி, பிஎஸ்சி 3-ம் ஆண்டு, திவ்யப்ரியன் பிஎஸ்சி 2-ம் ஆண்டு, வி.தீபலட்சுமி பிஎஸ்பி 3-ம் ஆண்டு, அ.நந்தினி உணவியல் துறை. ஆறுதல் பரிசு (ரூ.500) பெறும் நெய்வேலிப் பள்ளி மாணவர்கள்: ச.சுஷ்மிதா 6-ம் வகுப்பு, ஜவகர் மெட்ரிக் பள்ளி, வட்டம் 17, சி.சசிகலாமா.வுனாதி, 10-ம் வகுப்பு என்எல்சி உயர்நிலைப்பள்ளி வட்டம் 26, பா.ஆரோக்கியமேரி 7-ம் வகுப்பு, என்எல்சி நடுநிலைப்பள்ளி வட்டம் 9, ம.சிவபாரதி, 9-ம் வகுப்பு, என்எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வட்டம் 11, சாந்திப்ரியா, 9-ம் வகுப்பு ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வட்டம் 17.
 
               மேற்கண்ட அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நெய்வேலி புத்தகக் கண்காட்சி அரங்கில் உள்ள வரவேற்பு அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுமாறு புத்தகக் கண்காட்சிக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior