உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

"மின்வாரியத்துக்குத் தரமான மென்பொருள் வேண்டும்'

கடலூர்:

              மின் வாரியத்துக்குத் தரமான மென்பொருள் வழங்க வேண்டும் என்று அகில இந்திய மின்வாரிய கணக்கீட்டாளர் மற்றும் பணம் வசூலிப்போர் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் மத்திய பேரவைக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

            மின்வாரியத்தில் பொதுமக்கள் கட்டணம் செலுத்த தற்போது பயன்பாட்டில் உள்ள மென்பொருள் தரமானதாக இல்லை. பல நேரங்களில் சரியாக இயங்குவது இல்லை. இதனால் பொது மக்களுக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே மின் வாரியத்துக்குத் தரமான மென்பொருள் வழங்க வேண்டும். கணக்கீட்டாளர் பதவியில் இருந்து கணக்கீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்கும்போது, கணக்கியல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

                        புதிய நிர்வாகிகள் தேர்தலில் மாநிலத் தலைவராக பா.சுகுமார், மாநிலப் பொதுச் செயலாளராக கடலூர் இராம.சனார்த்தனன், பொருளாளராக பூமிநாதன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப் பட்டனர். கூட்டத்துக்கு மூ.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மு.அரங்கநாதன் வரவேற்றார். புதிய பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் சிறப்புரை நிகழ்த்தினார். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடலூர் வட்டப் பொருளாளர் துரியானந்தன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior