உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

நெய்வேலி என்எல்சி பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

நெய்வேலி:

               மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெய்வேலி டாக்டர் முருகன் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட முகாமை பள்ளியின் உதவித் தலைமையாசிரியை எஸ்.அமிழ்தா தொடங்கி வைத்தார். பள்ளியின் என்எஸ்எஸ் அலுவலர் கபிலன் முன்னிலை வகித்தார். முகாமில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச கண்பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள், டாக்டர் முருகன் அறக்கட்டளை நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior