உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

எனது வாழ்க்கையை மாற்றியமைத்தவை புத்தகங்கள்: நடிகர் நாசர்


தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நெய்வேலியில் சனிக்கிழமை நடந்த புத்தகக் கண்காட்சி
 
 
நெய்வேலி:
 
           "நான் ஒரு நடிகன்' என்ற அடையாளத்தின் காரணமாக நெய்வேலிக்கு வரவில்லை. புத்தகம் என்ற வார்த்தைக்காகத்தான் நெய்வேலி வந்தேன். ஏனென்றால் எனது வாழ்க்கையை மாற்றியமைத்தவை புத்தகங்கள்தான் என்று நெய்வேலியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி விழாவில் நடிகர் நாசர் பேசினார்.
 
             நெய்வேலி 13-வது புத்தகக் கண்காட்சி, நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் ஜூலை 9 முதல் தொடர்ந்து நடைபெறுகிறது.இப்புத்தகக் கண்காட்சியின் 2-ம் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் நாசர், தினமணி-நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய குறும்படப் போட்டியில் முதல்பரிசு (ரூ.15 ஆயிரம்) பெற்ற இயக்குநர் ஏ.ஆர்.சுப்புராஜ், 2-ம் பரிசு(ரூ.10 ஆயிரம்) பெற்ற பொன்.சுதா, 3-ம் பரிசு(ரூ.5 ஆயிரம்) பெற்ற செங்கோடன்.மோகன் ஆகியோருக்கு பரிசுத் தொகையையும் சான்றிதழையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து சிறப்புப் பரிசு( ரூ.ஆயிரம்) பெற்ற சி.விஜயன் (கதைக் கருவுக்காக), பிரியன்(நடிப்பு-ஆண்), கீர்த்தி(நடிப்பு-பெண்), ஆர்.இளையராஜா (ஒளிப்பதிவு),பகவான்( இயக்கம்) உள்ளிட்டோருக்கு பரிசுகளை வழங்கினார்.மேலும் சிறந்த படத்தொகுப்புக்கான இயக்குநர் ஏ.பீம்சிங் வழங்கும் முதல்பரிசு (ரூ.1500) எல்.வி.கே.தாஸ், 2-ம் பரிசு (ரூ.1250) பி.காரல்மார்க்ஸ், 3-ம் பரிசு (ரூ.1000) ராம், 4-ம் பரிசு (ரூ.750) எஸ்.கண்ணன், 5-ம் பரிசு (ரூ.500) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
 
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாசர், 
 
              உங்கள் பிள்ளைகளைப் புத்தகங்களைப் படிக்கச் சொல்லுங்கள். புத்தகங்கள் மட்டுமே உண்மையைக் கூறக்கூடியவை. எனது வாழ்க்கையை மாற்றியமைத்தவை புத்தகங்கள்தான்.மேலும் அவை சிந்தனையை தூண்டக் கூடியவை. இன்று ஆயிரமாயிரம் புத்தகங்கள் வந்தாலும் "சந்தோஷமாக இருப்பது எப்படி' என்ற புத்தகங்கள் வெளிவராதது வருத்தமளிக்கிறது.கோடி ரூபாய் கொடுத்தாலும் நெய்வேலி போன்ற இடங்கள் அமைவது அரிது என்றார் நடிகர் நாசர். 

                இதைத் தொடர்ந்து தினமும் எழுத்தாளர்களை  கௌரவிக்கப்படும் வரிசையில் முதல் நாளான வெள்ளிக்கிழமை திருநெல்வேலியைச் சேர்ந்த முனைவர் பா.வளனரசு கெüரவிக்கப்பட்டார்.அருணா பதிப்பகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கெüரவிக்கப்பட்டார். முன்னனி எழுத்தாளர் க.பூபதி எழுதிய "விண்ணைத் தேடும் நிலவு' எனும் நூலை நடிகர் நாசர் வெளியிட முதல் பிரதியை என்எல்சி இயக்குநர் ஆர்.கந்தசாமி பெற்றுக் கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior