உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

அ.தி.மு.க.,வுக்கு சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி


          


                 தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு போன்றவை பாராட்டும் போது, இங்குள்ள எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன' என்று சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:


        பொதுமக்களிடம் செல்வாக்கை இழந்துள்ள ஜெயலலிதா, மக்களின் கவனத்தை திசை திருப்ப, சின்ன, சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் நாளுக்கொரு போராட்ட அறிவிப்பு வெளியிட்டு, அவரது கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி, அதைக் கண்டித்து அ.தி.மு.க.,வினரால் கடந்த 10ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.


                சென்னை அரசு மருத்துவமனையில் இருந்த பழைய மருத்துவமனை கட்டடத்தை இடித்து, அந்த இடத்தில் ஹட்கோ உதவியுடன் புதிய அடுக்கு மாடி மருத்துவமனை தி.மு.க., ஆட்சியில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், ஆட்சி மாற்றத்தால் இதை ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த உண்மை கூட தெரியாமல் அவரது தலைவி மருத்துவமனையை கட்டியதாக சேகர்பாபு பேசியுள்ளார்.


                பேஸ்மேக்கர் கருவி தேவைப்படும் நோயாளிகளுக்கு, இம்மருத்துவமனையில் எந்தவித தடங்களும் இன்றி பொருத்தப்பட்டு வருகிறது. இதுவரை எந்த நோயாளியும் இறக்க வில்லை. இம்மருத்துமனையில் மருந்து வாங்குவதில், 100 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளதாகவும் உண்மைக்கு மாறாக அவர் பேசியுள்ளார்.


               தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகள் பாராட்டும் குழ்நிலையில், இங்கே இருக்கிற எதிர்க்கட்சிகள் மட்டும் குற்றச்சாட்டு கூறுவது உள்நோக்கம் கொண்டது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior