உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

கடலூர்:
 
            சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். 
 
கடலூரில் சனிக்கிழமை  புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியது: 
 
                சிதம்பரம் நடராஜர் கோயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் தெற்கு வாயிலை திறக்க வேண்டும். திறக்காவிட்டால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி போராட்டம் நடத்துவோம். 2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வீட்டுமனைப் பட்டா வழங்குதல், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டங்களை நிறைவேற்ற வில்லை. இலவசத் திட்டங்கள் தேர்தலுக்கு மட்டுமே பயன்படும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் திட்டத்தை தி.மு.க.வும் ஆதரிப்பது கண்டிக்கத்தக்கது.
 
             1984 முதல் மத்திய அரசின் உள்கூறுகள் திட்டத்தில் வழங்கிய நிதிகள் மூலம் மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டியவற்றைச் செய்ய வில்லை. அப்படி இருக்க சாதிவாரியாகக் கணக்கெடுத்து என்ன பயன் விளையப் போகிறது. சாதிவாரி கணக்கெடுப்பால் சாதிப் பிரிவினைகள், பாகுபாடுகள் மேலும் அதிகரிக்கும். ஒற்றுமையைக் குலைக்கும். எனவே தி.மு.க. தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.  மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலையைச் சுற்றி பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரி உழவர் சந்தை அருகில் இக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ஆ.ஆதவன் தலைமை தாங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior