உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் கிராமத்தில் இரவில் கருங்கல் ஜல்லி அள்ளிய லாரி, புல்டோசர் சிறைபிடிப்பு

ஸ்ரீமுஷ்ணம்: 

           இரவில் கருங்கல் ஜல்லி அள்ளிய டிப்பர் லாரி மற்றும் புல்டோசரை பொதுமக்கள் சிறை பிடித்தனர். 

             ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் கிராமத் திற்குச் செல்லும் சாலையில் 47.65 லட்சம் செலவில் சாலை போடும் பணி நடக்கிறது. தற்போது கருங்கல் ஜல்லி அமைத்து கிராவல் நிரப்பும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாலையின் ஓரத்தில் கொட்டியிருந்த கருங்கல் ஜல்லியை டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த குணமங்கலம் கிராம பொதுமக்கள் விரைந்து சென்று ஜல்லி அள்ளிய டிப்பர் லாரி மற்றும் புல்டோசரை வெளியே எடுத்து செல்லாமல் சிறைபிடித்து குணமங்கலம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். 

               இதனை தொடர்ந்து நேற்று காலை சாலை ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன், ரமேஷ், சவுந்திரபாண்டியன், வெற்றிவேல், பார்த்தசாரதி, சீனுவாசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் டிப்பர்களில் அள்ளிய ஜல்லியை மீண்டும் கொண்டு வந்து கொட்டிய பின்னர் சாலை பணிகளை துவங்குவது என ஒப்புக் கொண்டதன் பேரில் பொதுமக்கள் டிப்பர் லாரியையும், புல்டோசரையும் விடுவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior