உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் கிராமத்தில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

நடுவீரப்பட்டு: 

                  நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் கிராமத்தில் வரும்முன் காப் போம் திட்டதின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

                 ஊராட்சி தலைவர் தங்கம் நந்தகோபால் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி முன்னிலை வகித்தார். முகாமில் ஸ்கேன், இ.சி.ஜி., ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. 987 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 22 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். ஒன்றிய கவுன்சிலர் ஆசைவள்ளி, ஊராட்சி துணைத் தலைவர் குப்புசாமி, முருகன், டாக்டர் ரவிச்சந்தின், சுகாதார மேற்பார்வையாளர் சீத்தாராமன், சுகாதார ஆய்வாளர் தாமோதரன், தேவசேனா மற்றும் பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior