உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

கடலூரில் அடிப்படை வசதி கேட்டு குறவர்கள் கலெக்டரிடம் மனு

கடலூர்: 

           அடிப்படை வசதி கேட்டு குறவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

இது குறித்து திருமாணிக்குழியில் வசிக்கும் குறவர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

            கடலூர் அடுத்த திருமாணிக்குழி ஊராட்சி ஆர்.ஆர்., நகரில் காசா தொண்டு நிறுவனம் சார்பில் 28 குடியிருப்புகள் குறவர்களுக்கு கட்டித் தரப்பட்டு, அங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றோம். இங்கு கடந்த ஒன்னரை ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. மின் விளக்கு வசதியும் இல்லை. இதனால் குடிநீர் கிடைக்காமலும், இரவு நேரங்களில் குடியிருப்புகள் இருளில் மூழ்கிவிடுவதாலும் வசிப்பதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றோம். எனவே எங்களின் நலன் கருதி இங்கு உடனடியாக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior