உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

பாலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

கடலூர்: 

                 பாலூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கடலூர் ஜூனியர் சேம்பர் சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. 

                       ஜூனியர் சேம்பர் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் டாக்டர் கணபதி, கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் புஷ்பராஜ் வரவேற்றார். ரெட் கிராஸ் மாவட்ட கவுரவத் தலைவர் பாலசுப்ரமணியன் மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு, புத்தகங்களை வழங்கினார். பின்னர் உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கும் முறைகள் என்ற தலைப்பில் நடந்த கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்சாய் கிருஷ்ணன் பரிசு வழங்கினார். விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜசேகர், மண்டல ஒருங்கிணைப்பாளர் பாபு தானேஸ்வரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சாருமதி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior