உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 13, 2010

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு பிடிக்க கூண்டு

கடலூர்: 
 
             கலெக்டர் அலுவல வளாகத்தில் பாம்பு பிடிப் பதற்கு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. 
 
                 கடலூரில் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் பாம்பு புகுந்ததால் அங்கு வேலை செய்தவர்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து கலெக் டர் அலுவலகத்தில் இருந்து சாரை பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டது. இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பூனம் சந்த், பாம்புகளை பிடிப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று இரும்பு கம்பிகளினாலான கூண்டு வைத்தார். மேலும் பாம்புகளை வரவழைப்பதற்காக உயிருடன் எலியும் கூண்டில் வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior