உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

கடலூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது

கடலூர்:

             கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க அரசு பணம் ஒதுக்கீடு செய்தும் பணியை துவங்காத நெடுஞ்சாலைத்துறையினரைக் கண்டித்து அலுவலகத்தை முற்றுயிட்ட அனைத்து பொது நல இயக்கங்களைச் சேர்ந்த 22 பேரை போலீசார் கைது செய்தனர். 

              கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க தமிழக அரசு 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) மெத்தனமாக இருந்து வருகிறது. உடனடியாக டெண்டர் விட்டு பணிகளை துவக்க வேண்டும். இணைப்பு சாலை அமைக்கவும் வலியுறுத்தி கடலூர் அனைத்து பொது நல இயங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கடலூர் பீச் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையிலான போலீசார் பொதுநல இயங்களைச் சேர்ந்த வக்கீல் திருமார்பன் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior