உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றிதாசில்தார் பேச்சுவார்த்தை

ஸ்ரீமுஷ்ணம்:

         ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளிக்கூடம் கட்ட ஒதுக் கப்பட்ட இடத்தில் ஆக் கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தாசில்தார் பேச்சு வார்த்தை நடத்தினார்.

              ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த சாத்தா வட்டம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட இட நெருக்கடியால் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது. இதனால் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. காட்டுமன்னார்கோயில் தாசில்தார் விஜயலட்சுமி, மண்டல துணை தாசில்தார் தனசிங்கு, ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சொந்த இடம் ஏதும் இல்லாத ஒரு நபருக்கு மட்டும் மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior