உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

கடலூரில் கடலோர கிராமங்களில் மீனவர்களுடன் போலீசார் கலந்தாய்வு

கடலூர்:

            கடலோர பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து மீனவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

            கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்தந்த பகுதி மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கடலில் அன்னிய நாட்டு படகுகள் மற்றும் அன்னிய நபர்களை கண்டாலோ, மீனவ கிராமங்களில் புதிய நபர்களை கண்டாலோ போலீஸ் மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

                 அதன் ஒரு பகுதியாக நேற்று கடலூர் உட் கோட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட கடலோர கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீனவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கடலூர் துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேவனாம்பட் டினம், சோனங்குப்பம், அக்கரைக்கோரி, நாயக்கன் பேட்டை, தம்மனாம் பேட்டை, சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை மற் றும் சித்திரைப் பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடல் வழியே அன்னிய நபர்கள் ஊடுருவலை தடுக்க மீனவர்கள் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், எவ்வாறு தகவல் தெரிவிப்பது என்பது குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior