உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

சிறுபாக்கம் ஏரியில் காட்டாமணக்கு செடி:நீர்ப்பிடிப்பு குறைந்து தூர்ந்தது

சிறுபாக்கம்:

             சிறுபாக்கம் ஏரியில் காட்டாமணக்கு செடி மற்றும் ஆக்கிரமிப்புகளால் நீர்வரத்து குறைந்துள்ளது.

            சிறுபாக்கம் மேற்கு புறம் ஆண்டவர் கோவில் அருகில் அமைந்துள்ள ஏரியில் நான்கு மதகுகள் அமைந்துள்ளது. இதன் நீர்ப்பிடிப்பின் மூலம் சிறுபாக்கம், அரசங்குடி, எஸ்.புதூர், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் காட்டாமணக்கு செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. கரையில் அமைந்துள்ள நான்கு மதகுகளும் சிதைந்து பாழடைந்து காணப்படுகின்றன. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இந்த ஏரி, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. 

               இதனால் 4 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களின் விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.ஏரிக்கு நீர் வரவேண்டிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஏரிக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது.இந்த ஏரியில் முழு கொள்ளளவு நீர் நிரம்பி 10 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில், நீர்ப்பிடிப்பு முழுமையாக செய்யப்பட்டு விவசாயத்திற்கு நீர் கிடைக்குமா என்பது விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து ஏரியினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior