உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

நெல்லிக்குப்பம் நகருக்குள் ஷேர் ஆட்டோ அனுமதிக்க கோரிக்கை

நெல்லிக்குப்பம்:

         நெல்லிக்குப்பம் நகருக்குள் ஷேர் ஆட்டோக் களை அனுமதிக்க வேண்டுமென அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை:

            நெல்லிக்குப்பத்தில் அம்பேத்கர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கத்தில் 15 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை வரை ஷேர் ஆட்டோவை இயக்கி வந்தனர். கடலூரில் இருந்து 30 கி.மீ., வரை சென்றுவர பர்மிட் வழங்கியுள்ளனர். நெல்லிக்குப்பம் நகருக்குள் வரக்கூடாது என திடீரென போலீசார் மிரட்டுகின்றனர். ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை வரை ஷேர் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior