உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

ரூ.157 கோடி பங்கு ஈவுத்தொகை: மத்திய அரசிடம் வழங்கியது என்.எல்.சி.


மத்திய அரசின் இறுதி பங்கு ஈவுத்தொகையான ரூ.156.96 கோடிக்கான காசோலையை மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ்ஜெய்ஸ்வாலிடம் (வலது) வழங்குகிறார் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி
 
நெய்வேலி:

           என்எல்சி நிறுவனத்தின் மீது மத்திய அரசு செய்துள்ள முதலீட்டுக்காக 2009-10-ம் ஆண்டுக்கான இறுதி பங்கு ஈவுத்தொகையாக ரூ.156.96 கோடியை மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலிடம் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

                 மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி கடந்த நிதியாண்டில் ரூ.1,247.46 கோடி நிகர லாபமாக ஈட்டியது.  இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடந்த ஆண்டுப் பேரவைக் கூட்டத்தின் போது, பங்குதாரர்களுக்கு 20 சதவிகித பங்கு ஈவுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. என்எல்சி நிறுவனத்தின் முதலீட்டில் 93.56 சதவிகிதத்தை இந்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி மத்திய அரசுக்கு என்எல்சி நிறுவனம் ரூ.313.92 கோடியை பங்கு ஈவுத்தொகையாக வழங்கவேண்டும்.

                   அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தவணையாக 10 சதவிகித பங்கு ஈவுத்தொகை ரூ.156.96 கோடியை மத்திய நிலக்கரி மற்றும் புள்ளியியல் துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் நெய்வேலி வந்தபோது  என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வழங்கினார். இந்நிலையில் தில்லியில் செப்டம்பர் 2-ல் நடைபெற்ற ஒரு எளிய நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலிடம் 2-வது தவணை பங்குஈவுத் தொகையான ரூ.156.96 கோடியை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வழங்கினார். இந் நிகழ்ச்சியில் நிலக்கரித்துறை அமைச்சக செயலர் பாலகிருஷ்ணன், என்எல்சி நிதித்துறை இயக்குநர் கே.சேகர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior