உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

குடிநீருக்கு தவிக்கும் கேப்பர்மலை கிராம மக்கள்

கடலூர்:

                      கடலூர் மக்களின் தாகத்தை தீர்த்து வைக்கும் கேப்பர்மலை கிராமத்தில், மக்கள் குடிநீரின்றி அல்லல்படுகிறார்கள். கடலூர் நகருக்கு கேப்பர்மலையில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து, குடிநீர் வழங்கப் படுகிறது. பல்வேறு கிராமங்களில் 15-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் கடலூருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  

             கேப்பர்மலையில் உள்ள கிராமம் எம்.புதூர். இங்கு ஒரு மாதத்துக்கும் மேலாக ஊராட்சி மன்ற ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட அக்கிராம மக்கள், அங்குள்ள தோட்டங்களில் வயல்வெளிகளில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் பிடித்து வருகிறார்கள். 

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர கூறியது 

                           ஏற்கெனவே போடப்பட்ட ஆழ்குழாய்க் கிணற்றில் தண்ணீர், குடிக்கச் சுவையாக இல்லாமல் மோசக இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே புதிய ஆழ்குழாய்க் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சில நாள்களில் ஆழ்குழாய்க் கிணறு போடப்பட்டுவிடும். அதன்பிறகு நல்ல குடிநீர் எம்.புதூர் மக்களுக்குக் கிடைக்கும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior