உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

குண்டும், குழியுமான மானியம்ஆடுர் சாலை

சிதம்பரம்:

               காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

             3 கி.மீ. நீள இச் சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி நடந்துகூட செல்ல முடியாத நிலையில் மிக மோசமாக உள்ளது. இச்சாலை வழியே தினமும் ஒரு மினி பஸ் மட்டும் வந்து செல்கிறது. இச்சாலையில் ராயநல்லூர், கொத்தங்குடி, நத்தமலை, நெய்வாசல், மானியம் ஆடூர் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள் லால்பேட்டை மேல்நிலைப் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருகின்றனர்.

           இந்நிலையில் சாலை மிக மோசமாக உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதியுற நேரிடுகிறது. இதனால் அவர்கள் பள்ளிக்கு செல்வதை தவிர்க்கும் நிலை உள்ளது. மழைக் காலத்துக்கு முன்னதாக இச் சாலையை சீரமைக்க, கடலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior