உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

பண்ருட்டியில் காய்கறி விலை வீழ்ச்சி

பண்ருட்டி:

                 பண்ருட்டி பகுதியில் நாட்டு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதிகளை சேர்ந்த பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, பலாப்பட்டு, மாளிகம்பட்டு, தாழம்பட்டி, திராசு, ராசாப்பாளையம், கட்டமுத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் காய்கறி விவசாயம் நடைபெறுகிறது. மேற்கண்ட பகுதி விவசாயிகள் தோட்டப்பயிரான முருங்கை, வெண்டை, பாகல், கத்தரி, புடலை, கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகளை அதிக பரப்பளவில் பயிர் செய்கின்றனர். இப்பகுதியில் விளையும் இந்த காய்கறிகள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.தற்போது பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கறி சந்தைக்கு, காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து எஸ்.வி.டி. காய்கறி மொத்த வியாபாரி ஆர்.சங்கர் கூறியது:

              பண்ருட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை நிலவரப்படி சந்தையில் (மொத்த விற்பனையில் ஒரு கிலோ) நாட்டு முருங்கை  2, வெண்டை  4, கத்தரி  6, புடலை  3, கொத்தவரை  4, பாகல்  6 விலை போகிறது. கடந்த வாரம் 70 காய் கொண்ட வாழைத் தார்  100 முதல் 120 வரை விலை போனது. தற்போது  70, 80 தான் விலை போகிறது என்றார் சங்கர்.

துகுறித்து விவசாயிகள் கூறியது 

                          ""அதிக நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளதாலும், மகசூல் அதிகரித்துள்ளதாலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காய் விற்ற பணம், அறுவடைக் கூலி கொடுக்கக்கூட போதவில்லை, இந்நிலையில் அடிக்கடி மழை பெய்து வருவதால் பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளது இதனால் மருத்து அடிக்கும் செலவும் கூடியுள்ளது'' என கவலையுடன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior