உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

ரயில்வே துறையைக் கண்டித்து கடலூரில் உண்ணாவிரதம்

கடலூர்:

                   ரயில்வே துறையை கண்டித்து கடலூரில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.கடலூர் வழியாக இயக்கப்படும் பல ரயில்கள் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை. 

                    இதுகுறித்து பல்வேறு வழிகளிலும் கோரிக்கைகள் அனுப்பியும் ரயில்வே இலாகா மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. எனவே துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படாததைக் கண்டித்து கடலூர் பொதுநல சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதம் துறைமுகம் நகரில் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு பொதுநலச் சங்கங்களின் பொதுச்செயலர் ப.கடல் தனசேகரன் தலைமை தாங்கினார். சீனுவாசன், ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை வழக்கறிஞர் த.ராஜசேகரன் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை வழக்கறிஞர் கே.ராஜேந்திரன், கவிஞர் இரா.முத்துக்குமரன், பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கண்டனஉரை நிகழ்த்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior