உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

என்.எல்.சி. நிறுவனத்துக்கு நவரத்னா அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு

நெய்வேலி:

                    என்எல்சி நிறுவனத்துக்கு சிறந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் "நவரத்னா' அந்தஸ்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார்.

                   பொறியியல் அறிஞர் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெய்வேலி பொறியாளர் மற்றும் அறிவியலாலர் கழகம் சார்பில் பொறியாளர் தினவிழா நெய்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விஸ்வேஸ்வரய்யா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி பேசுகையில்

                      1950-ல் 37 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை தற்போது 120 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது இந்திய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் அனைவருக்கும் மின்சாரம் வழங்க சுமார் ஒரு லட்சம் மெகாவாட் மின்னுற்பத்தி செய்யவேண்டும் என்றார்.
÷விழாவுக்கு நிறுவன சுரங்கத்துறை இயக்குநர் பி.சுரேந்திரமோகன் தலைமை வகித்தார். இந்தியப் பொறியாளர் கழகத்தின் நெய்வேலிக் கிளை கெüரவச் செயலர் கே.சக்கரவர்த்தி வரவேற்றார். பொறியாளர் மற்றும் அறிவியலாளர் கழகத் தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior