உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

அச்சுறுத்தும் அரிசி ஆலைக் கழிவு


நெய்வேலி நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறி சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையோரம் தேங்கிநிற்கும் கழிவுநீர்.
 
நெய்வேலி:

             நெய்வேலியில் அரசின் நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நின்று அப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, சுகாதார சீர்கேட்டை உருவாக்கி அச்சுறுத்தி வருகிறது.

                  சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி ஆர்ச்கேட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் மாநில அரசின் நவீன அரிசி ஆலை உள்ளது.÷தொடக்கத்தில் இந்த ஆலையில் நாளொன்றுக்கு 100 டன் நெல் அரவைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அரிசியாக மாற்றப்பட்டது. தற்போது 50 சதவீதத்துக்கும் குறைவாக நெல் அரைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆலையில் நெல் ஊறலுக்கு பயன்படுத்தப்பட்ட கழிவுநீர் மற்றும் உமி கலந்த கழிவுநீர் ஆலையினுள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் அவை அப்படியே வெளியேற்றப்படுவதாக தெரிகிறது.

                   இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீர், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் 2 கி.மீ. தூரத்துக்கு தேங்கி நிற்கிறது. இதனால் சாலையோரத்தில் சிற்றுண்டி கடைகள் வைத்திருப்போரும், தங்களது கழிவுகளை அங்கேயே கொட்டத் தொடங்கியுள்ளனர்.÷தேங்கி நிற்கும் கழிவுநீரால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் உருவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. அவ்வழியே நடந்து செல்வோரும், இருசக்கர வாகனத்தில் செல்வோரும் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் அந்த இடத்தைக் கடக்க வேண்டியுள்ளது. 

               மேலும் கனரக வாகனங்கள் ஒன்றுக்கு ஒன்று முந்தி செல்லும் போது, சாலையின் ஓரத்தில் உள்ள கழிவுநீர் பகுதியை குட்டையாக மாற்றிவிடுகின்றன. இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஒதுங்கக் கூட முடிவதில்லை. மேலும் இப்பகுதியில் பல புது குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த துர்நாற்றத்தால் அவர்கள் தினந்தோறும் அவதிக்கு ஆளாகின்றனர்.

                     இது குறித்து மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பல புகார்கள் சென்றயதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலையை பார்வையிட்டு, ஆலையினுள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என அறிவுறுத்திச் சென்றுள்ளனர். ஆலை நிர்வாகமும் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான கோப்புகளை தயார் செய்து, நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு அனுப்பியுள்ளனர். இருப்பினும் நுகர்பொருள் வாணிபக் கழகம் இது குறித்து எவ்வித மேல் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து கடலூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் சேகரின் உதவி மேலாளர் வில்சன்,

                        சுகாதார சீர்கேடு குறித்து விசாரிக்கப்படும் என்றார். பொதுமக்களின் நலன் கருதி ஆலை நிர்வாகம் முனைப்புடன் செயல்பட முனைந்தாலும், அதற்கானத் துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்படுகிறார்களா என்றால் இல்லை என்றே கூறலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior