உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை

கடலூர்:

                 அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வசதிக்காக கூடுதலாகப் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று, தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், மண்டல ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் வலியுறுத்தினார்.இக் கூட்டம் சென்னையில் தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் தீபக் கிரீசன் தலைமையில் அண்மையில் நடந்தது. 

கூட்டத்தில் ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவகுமார் தெரிவித்த கோரிக்கைகள்:
 
                விழுப்புரம்- மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில், மீட்டர் கேஜ் ரயில்பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் அனைத்து ரயில்களும், கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று போக வேண்டும். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு வசதியாக, மாலையில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை. எனவே கூடுதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

                          அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கழிவறைகள் முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. கழிவறைகளை முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் திருப்பாப்புலியூர், துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலும் குடிநீர் பிரச்னை உள்ளது. பல ரயில் நிலையங்களில் வழங்கப்படும் குடிநீர் உவர் நீராக உள்ளது. போதுமான குடிநீர் குழாய்கள் இல்லை. குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior