உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

பன்றிக் காய்ச்சல்: என்எல்சி தலைமை அலுவலக ஊழியர் சாவு

நெய்வேலி:

                     பன்றிக் காய்ச்சலால் என்எல்சி தலைமை அலுவலக ஊழியர் சொக்கலிங்கம்(46) வெள்ளிக்கிழமை இறந்தார். தொமுசவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துவந்தார். இவர் இம்மாத தொடக்கத்தில் உறவினர் இல்ல திருமணத்துக்காக ராஜபாளையம் சென்றுவந்தார்.

                 வீடு திரும்பிய சொக்கலிங்கத்துக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, செப்டம்பர் 2-ல் என்எல்சி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சொக்கலிங்கத்துக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவே, செப்டம்பர் 3-ம் தேதி அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சொக்கலிங்கம், வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்துவிட்டார். 

                    இதைத் தொடர்ந்து சொக்கலிங்கத்தின் உடல் நெய்வேலிக்கு கொண்டுவரப்பட்டு, வெள்ளிக்கிழமை பகலிலேயே மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த சொக்கலிங்கத்துக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior