உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

பாசிமுத்தான் ஓடையில் பாசனத்துக்கு நீர் திறப்பு

  சிதம்பரம்:

             சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான் ஓடையில் சனிக்கிழமை பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ், நீரை திறந்துவிட்டார்.

                     வீராணம் ஏரியிலிருந்து பிரியும் பரிபூரணநத்தம் வாய்க்கால் தொடர்ச்சியாகவும், பொன்னேரியின் உபரிநீர் வடிகால் ஆகவும் பாசிமுத்தான்ஓடை திகழ்கிறது. இது பாசன வாய்க்காலாகவும் வடிகாலாகவும் உள்ளது. பாசிமுத்தான் ஓடையில் நீர் திறக்கப்பட்டதன் மூலம் மீதிகுடி, கீழ்அனுவம்பட்டு, மேல்அனுவம்பட்டு, கோவிலாம்பூண்டி, புஞ்சைமகத்துவாழ்க்கை உள்ளிட்ட 8 கிராமங்களில் 3910 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். நீர்திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் க.கலியபெருமாள் (கொள்ளிடம் வடிநிலம்), பெ.பெரியசாமி (அணைக்கரை), பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior