உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்

கடலூர்:

               கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் இடம் மாற்றப்பட்டதால், பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மயிலாடுதுறை-விழுப்புரம் அகலப் பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின், பல ரயில்கள் கடலூர் மாவட்டத்தில் நின்று போகாத நிலையும், சில ரயில்கள் ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டும் நின்று போகும் நிலையும் ஏற்பட்டு விட்டது.இந்த கோரிக்கைகள், ரயில்வே துறை அதிகாரிகளின் குப்பைத் தொட்டிகளில் முடங்கிப் போய்விட்டன. 

                 இதனால் கடலூர் மாவட்ட மக்களுக்கு ரயில் பயணம் எட்டாக்கனியாவும், ரயில் நிலையங்கள் குறைந்தபட்ச வசதிகள் அற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அத்தகைய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்ட ரயில் நிலையங்களில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் முதல் இடம் வகிக்கிறது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது ரயில் நிலையத்தின் முகப்பு ரயில் தண்டவாளங்களுக்கு மேற்குப் பக்கமாக இருந்தது. அகலப் பாதை ஆக்கப்பட்ட பிரதான முகப்பு கிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

                 இந்த மாற்றம் காரணமாக தற்போது ரயில் பாதைகளின் மேற்குப் பகுதியில் ரயில்களுக்கான முன்பதிவுக் கெüன்டர்களும், அன்றாடப் பயணத்துக்கு டிக்கெட் எடுக்கும் கவுன்டர்கள் கிழக்குப் பகுதிக்கும் மாற்றப்பட்டு விட்டன.இந்த மாற்றம் காரணமாக திருப்பாப்புலியூர் பகுதியில் இருந்து பயணச் சீட்டு வாங்க வருவோர், உயர் நடைமேடையை பயன்படுத்தி, பயணச்சீட்டு கெüன்ட்டர்களை அடைவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.மேலும் ஒரு பிளாட்பாரத்தைத் தவிர மற்ற இடங்களில் மின் விளக்குகள் இல்லாததால் பயணிகள் காத்திருக்கும் இடம், குப்பங்குளம் பாதை உள்ளிட்ட ரயில் நிலைய வளாகம், இரவு நேரங்களில் மது அருந்தும் பார்களாக மாறி விடுகின்றன.

                   ரயில் நிலையத்துக்கு புதிய முகப்பு வாயிலுக்கு வரும் வழி, ஆட்டோ ரிக்ஷாக்களால் அடைபட்டு, பயணிகள் எளிதில் உள்ளே வரமுடியாத நிலை உள்ளது.ரயில் நிலைய முகப்பு, பூங்கா அமைக்கும் வகையில் கட்டுமானங்கள் செய்யப்பட்டும் அவை, பூங்காக்களாக இல்லாமல், குப்பைக் கொட்டும் இடமாக மாறியுள்ளது.ரயில் நிலைய வளாகத்தில் காலியாக இருக்கும் இடங்கள் எல்லாம், தனியாருக்குச் சொந்தமான வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு, அவற்றின் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டு விட்டன.ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வைக்கப்பட்டு இருக்கும் குடிநீர், உவர் நீராக உள்ளதால் குடிப்பதற்கு லாயக்கற்றதாக இருப்பதாக பயணிகள் தெரிவிக்கிறார்கள். 

 இது குறித்து ரயில் நிலைய அதிகாரிகளைக் கேட்டால், 

                           "ரயில் நிலையக் கட்டுமானப் பணிகள் இன்னமும் முடிவடையவில்லை. போதுமான ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை' என்று கைவிரிக்கிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior