உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

கிராமப்புற மறுசீரமைப்பு திட்டத்தில் 3267 குடியிருப்புகள்


பரங்கிப்பேட்டை : 

                 ராஜிவ்காந்தி கிராமப்புற மறுசீரமைப்பு திட்டத்தில் மாவட்டத்தில் 3267 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார். 

          பரங்கிப்பேட்டை மாதாகோவில் தெருவில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு சசி தொண்டு நிறுவனம் சார்பில் 50 பயனாளிகளுக்கு தலா 2 லட்சத்து 80 ஆயிரம் வீதம் ஒரு கோடியே 40 லட்சம் செலவில் நிரந்தர குடியிருப்புகள் கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. சசி தொண்டு நிறுவன இயக்குநர் ரமேஷ்நாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மோகன், பேரூராட்சி சேர் மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் கவுரிசங்கர் வரவேற்றார். குடியிருப்புகளை திறந்து வைத்து கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில், சுனாமியால் பாதித்த 50 பயனாளிகளுக்கு சசி தொண்டு நிறுவனம் குடியிருப்புகள் கட்டிகொடுத்துள்ளது. அதுபோல் சுனாமியால் பாதித்தவர்களுக்கு 31 கிராமங்களில் முதல் சுற்றில் 2 ஆயிரத்து 203 வீடுகளும், இரண்டாவது சுற்றில் 37 கிராமங்களில் 2 ஆயிரத்து 792 வீடுகளும் கட்டிகொடுக்கப்பட்டுள்ளது.ராஜிவ்காந்தி கிராமப்புற மறுசீரமைப்பு திட்டத்தில் 3267 வீடுகள் கட்ட அனுமதியளிக்கப்பட்டு அதில் 1578 கிராமங்களிலும், 1678 நகரப்புறங்களிலும் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது என்றார். விழாவில் தாசில்தார் காமராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் செழியன், கே.என்.எச்., ஜெர் மன் தலைவர் கிடோபால் கன்பர்க், இந்திய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் சாமுவேல், ஒன்றிய ஆணையர் சுப்ரமணியன், செயல் அலுவலர் ஜிஜாபாய் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior