உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

வேப்பூர் பள்ளி மாணவர்களுக்கு மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு

சிறுபாக்கம் : 

              சென்னையில் நடந்த அறிவியல் தேர்வில் வெற்றி பெற்ற வேப்பூர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சந்திராயன் திட்ட இயக்குனர் பாராட்டினார். சென்னை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆறாம் ஆண்டு அறிவியல் தேர்வு நேற்று சென் னையில் நடந்தது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அய்யனார் மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி சூரியலட்சுமி, பிளஸ் 2 மாணவன் பிரவீன்குமார், ஏழாம் வகுப்பு மாணவன் சங்கர், மூன்றாம் வகுப்பு மாணவர் பாலாஜி ஆகிய நால்வரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது வேலம்மாள் கல்வி அறக்கட்டளை பள்ளியின் தாளாளர் வேல்மோகன், இருதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம், அய்யனார் பள்ளி கோபால் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior