உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

மகள் சாவில் சந்தேகம் போலீசில் தாய் புகார்

குடியாத்தம்:

                   மர்மமான முறையில் இறந்து கிடந்த மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாய் போலீசில் புகார் செய்துள்ளார். குடியாத்தம் புத்தர்நகர், கூடநகரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர்(24). இவருக்கும் பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகள் ஹரிபிரியா(19) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

              நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் படுத்து தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், பக்கத்தில் படுத்திருந்த ஹரிபிரியா இறந்து கிடந்ததாகவும் கவுரி சங்கர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஹரிபிரியாவின் தாய் மீரா தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஹரிபிரியாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ.,விசாரணை நடைபெற உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior