உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

எஸ்.ஐ., மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி :நான்கு பேர் ஆயுதங்களுடன் கைது

கடலூர் : 

                வடலூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றி கொலை செய்யும் நோக்கத்தோடு வேகமாக சென்ற சுமோ காரை விரட்டிச் சென்று ஆயுதங்களுடன் 4 பேரை கைது செய்தனர்.
 
              வடலூர் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கூட்ரோடு அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டி.என்.31 பி.இசட் 5342 பதிவெண் கொண்ட சுமோ கார் வேகமாக வந் தது. அதனை நிறுத்த முயன்ற சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் மீது மோதுவது போல் அருகே வந்த கார் நிற்காமல் சென்றது.அதிர்ச்சியடைந்த போலீசார் உடன் சுமோவை விரட்டிச் சென்று வடலூர் சத்யஞானசபை அருகே மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். காரில் வீச்சரிவாள், ஆணி பிடுங்கும் இரும்பு ராடு, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதை கண்டனர். விசாரணையில் வடலூர் கோட்டக்கரை சதீஷ் (33), காட்டுக் கொல்லை தட்சணாமூர்த்தி (31), உய்யகொண்டராவி பாபு (31), சேப்ளாநத்தம் நாகராஜன் (35) எனவும் இவர்கள் மீது கட்டப்பஞ்சாயத்து மற்றும் பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சதீஷ் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர்.  மேலும் அவர்கள் பயன்படுத்திய சுமோ கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior