உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

தீப்பெட்டி தொழிற்சாலையில் மூலப்பொருட்கள் சாம்பல்

குடியாத்தம்;

                 குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மூலப் பொருட்கள் எரிந்து சாம்பலானது.கு டியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இயந்திர தீப் பெட்டி தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து குடியாத்தம், பேரணாம்பட்டு, காட்பாடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

              கிடங்கில் வைக்கப்பட்டிரு ந்த மூலப்பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்ததும் கோட்ட அலுவலர் கஜேந்திரன், உதவி கோட்ட அலுவலர்கள் சுப்பிரமணி, எல்.சுப் பிரமணி, தாசில்தார் வசந்தா, டிஎஸ்பி.,காசிவிஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மற்றொரு விபத்து: 

                     குடியாத்தம் சந்தப்பேட்டை தோப்புத்தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த கழிவுப்பொருட்கள் திடீரென்று தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந் ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior