உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

நமக்கு நாமே திட்டத்திற்கு நிதி மங்களூர் ஆணையர் தகவல்

சிறுபாக்கம் : 

               மங்களூர் ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக நமக்கு நாமே திட்டத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இது குறித்து மங்களூர் ஒன்றிய ஆணையர் ஜெகநாதன் கூறியதாவது: 

                   மங்களூர் ஒன்றியத்தை சேர்ந்த 66 ஊராட்சிகள், 30 துணை கிராமங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின் றன. நடப்பு ஆண்டிற்கு நமக்கு நாமே திட்டத்திற் காக 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதில் ஒரு மடங்கு மக்கள் தொகை பங்களிப்புடன் பள்ளி சுற்றுச்சுவர், சிமென்ட் சாலை, ரேஷன் கடை கட்டடம், அங்கன் வாடி மையம் ஆகியவை கட்டப்படும். நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் மூலம் குளங்கள் ஆழப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட  உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் பணியை முடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது கூடுதல் ஆணையர் புஷ்பராஜ், பொறியாளர் மணிவேல் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior