உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்

கடலூர் : 

                     வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம் மருதூர் வள்ளலார் மண்டபத்தில் நடந்தது. பொருளாளர் அப்பானு  தலைமை தாங்கினார். பாதிரிமேடு ராஜசேகரன் முன்னிலை வகித்தார். கந்தவேல், வேல்முருகன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிர்வாக குழு  தலைவராக ராஜசேகரன், துணைத் தலைவராக கந்தவேல், செயலாளராக ராமானுஜம், இணை செயலாளராக சண்முகம், பொருளாளராக தவமணி,  ஆலோசகராக அப்பானு, சிறப்பு பிரதிநிதியாக சாரங்கபாணி மற்றும் செயற்குழு உறுப் பினர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் வாலாஜா ஏரியை ஆழப்படுத்த வேண்டும். கூட்டுக் கூட்டம் நடத்த வேண்டும். விவசாயத்திற்கு நீர் விடுவது, மேலபுதுப்பேட்டை, ஆயிகுளம் பகுதிகளில் இணைப்பு சாலை. ராமலிங்க அடிகள் பிறந்த இடத்தை சுற்றுலா மையமாக ஏற்படுத்த வேண்டும் உள் ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior