உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

புவனகிரி பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய கட்டடம்

புவனகிரி :

                   புவனகிரி பேரூராட்சியில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடம் கட்டப் பட்டு வருகிறது.

                      புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கவும், குடிநீர் கட்டணம், வீட்டுவரி,தொழில் வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய இந்த அலுவலகத்திற்கு வருகின்றனர். பேரூராட்சி உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும் இந்த கட்டடத்தில்தான் நடந்து வருகிறது. இதுதவிர அலுவலக பணிகள் அனைத்தும் ஒரே கட்டடத்தில் இயங்கி வருவது சிரமமாக இருந்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு மன்றக் கூட்டத்தில் புதிய கட்டடம் கட்ட தீர்மானம் நிறைவேறியது. அதனையொட்டி  பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 2009-10ம் ஆண்டு பகுதி-2  திட்டத்தின்கீழ் 20லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior