உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 29, 2010

எச்.ஐ.வி., அற்ற சமூகத்தை படைக்க சூளுரைக்க வேண்டும் : கலெக்டர் சீத்தாராமன் பேச்சு


விருத்தாசலம் : 

                     எச்.ஐ.வி., அற்ற சமூகத்தை படைக்க நாம் சூளுரைக்க வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் பேசினார்.
 
                     விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் செஞ்சுருள் விரைவு ரயில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கண்காட்சி துவக்க விழா நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், எய்ட்ஸ் கட்டுபாடு மாவட்ட திட்ட மேலாளர் கலைமதி முன்னிலை வகித்தனர். மருத்துவதுறை இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் வரவேற்றார்.
 
விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்து கலெக்டர் சீத்தாராமன் பேசியதாவது: 

                செஞ்சுருள் விரைவு ரயில் எய்ட்ஸ் குறித்து மக்களுக்கு தேவையான தகவல், சேவை மற்றும் விழிப்புணர்வுகளை வழங் குவதற்கு வந்துள்ளது. மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 911 பேரை பரிசோதித்ததில் 67 கர்ப்பிணி பெண்கள் உட் பட 841 பேருக்கு எச்.ஐ. வி., தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
                  மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் இல்லை என் றாலும் நாம் விழிப்புணர் வுடன் இருக்க வேண்டும். விரைவு ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளது. இதில் ஐந்தாவது பெட்டியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நர்சிங் மாணவர் கள், போலீஸ், என்.சி.சி., மற்றும் என். எஸ்.எஸ்., மாணவர்கள் 240 பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தகுந்த ஆலோசனைகளும் வழங் கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த கண்காட்சியை பார்க்கும் வகையில் களப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். எச்.ஐ.வி., அற்ற சமூகத்தை படைக்க நாம் சூளுரைக்க வேண் டும் என பேசினார்.
 
                  தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்க இணை இயக்குனர் அலெக்ஸ் பரிமளம், சுகாதார நலப்பணி துணை இயக்குனர் கிருஷ் ணராஜ், டி.எஸ்.பி., ராஜசேகரன், முதன்மை மருத்துவ அலுவலர் தமிழரசி, ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ஜெகதீசன், நிலைய மேலாளர் அய்யாசாமி  கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior